search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
    X

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

    • பெருந்துறை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் பெருந்துறை போலீசார் சம்பவயிடம் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க மாநிலம் பார்ஹனாஸ் சாக்பட்ரியை சேர்ந்த உஜ்ஜால் என்கிற மிஜனூர்காஜி (26), ஓடிசா மாநிலம் பாலன்கீர் சாத்காட்டினை சேர்ந்த ஜிஜேந்திரபட்டேல் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×