search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் காதல் தோல்வியால் தற்கொலை
    X

    தற்கொலை செய்து கொண்ட சுபாஷ்.

    என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் காதல் தோல்வியால் தற்கொலை

    • காதல் தோல்வி அடைந்ததால் சுபாஷ் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.
    • காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ராசிகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சுபாஷ் (24). டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரி.

    சுபாஷ் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காதல் தோல்வி அடைந்ததால் சுபாஷ் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள காவிரி ஆற்றுப்பாலத்திற்கு வந்தார். பின்னர் திடீரென அவர் காவிரி ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள இரும்பு குழாயில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தற்போது காவிரி ஆற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம்கன அடிதண்ணீர் ஓடுவதால் தற்கொலை செய்த சுபாஷின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சுபாஷின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×