search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை புதிய பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- 100 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    புதிய பஸ் நிலையத்தில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் வாகனங்களில் ஏற்றப்பட்ட காட்சி.

    நெல்லை புதிய பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- 100 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    அந்த வகையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் பஸ் நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, மாநகர நல அலுவலர் சரோஜா ஆலோசனையின் பேரில் உதவி ஆணையர் காளி முத்து தலைமையில் சுகா தார அலுவலர் அரசகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் உதவி பொறியாளர் முருகன் மேற்பார்வையில் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டது. அது மட்டுமின்றிமேலும் 100-க்கும் மேற்பட்ட கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×