search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.பி. அலுவலகம் எதிர்புற சாலையில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி
    X

    மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    எஸ்.பி. அலுவலகம் எதிர்புற சாலையில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி

    • நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • பணிகள் முடியும் வரை எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலையில் மட்டும் மின் வினியோகம் இருக்காது

    நெல்லை:

    நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தினை அகற்ற நெல்லை மாநகராட்சி கமிஷனர் விடுத்த வேண்டுகோள் விடுத்ததையடுத்து மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி மின்கம்பத்தை மாற்றி அமைக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மேற்பார்வை மின் பொறியாளர்குருசாமி, நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி, பாளையங்கோட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் எட்வர்ட்பொன்னுசாமி, உதவி மின் பொறியாளர்கள் வீரபுத்திரகுமார், முத்துராமலிங்கம் பார்வையிட்டனர்.

    மேலும் இந்த பணிகள் முடியும் வரை எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலையில் மட்டும் மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×