search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே மயங்கி விழுந்த மூதாட்டி சாவு
    X

    சங்கராபுரம் அருகே மயங்கி விழுந்த மூதாட்டி சாவு

    • சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் நரசன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    Next Story
    ×