search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் மின்வாரிய ஊழியர் தற்கொலை- வீட்டில் அழுகிய நிலையில் உடல்மீட்பு
    X

    பாளையில் மின்வாரிய ஊழியர் தற்கொலை- வீட்டில் அழுகிய நிலையில் உடல்மீட்பு

    • கணேசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
    • கணேசன் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    நெல்லை:

    பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது50). மின்வாரிய ஊழியர். இன்று காலை இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

    இதனையறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணேசன் தூக்கில் தொங்கியவாறு இறந்துகிடந்தார்.

    அவர் 4 நாட்களுக்கு முன்பு இறந்துள்ளதாக தெரிகிறது. இதனால் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இவரை சஸ்பெண்ட் செய்ததாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த அவர் மதுக்குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.

    இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த கணேசன் 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×