search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்கழி பிறப்பை முன்னிட்டு சேலம், நாமக்கல் கோவில்களில் அதிகாலை சிறப்பு வழிபாடு
    X

    சேலம் கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் இருந்து பஜனை பாடி ஊர்வலமாக சென்ற பக்தர்கள்.

    மார்கழி பிறப்பை முன்னிட்டு சேலம், நாமக்கல் கோவில்களில் அதிகாலை சிறப்பு வழிபாடு

    • மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகளும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெறுவது வழக்கம்.
    • சேலத்தில் பக்தர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    சேலம்:

    மார்கழி மாதம் பிறந்து விட்டால் வீடுகளில் பெண்கள் சூரியன் உதிக்கும் முன் கண் விழித்து குளிர்ந்த நீரில் நீராடி கோலத்தால் வாசலை அலங்கரித்து அன்றைய பொழுதை இனிதே வரவேற்கத்தொடங்கி விடுவர்.

    அவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் இணைந்து வண்ணமயமான கோலங்களை இட்டு மகிழ்வர். கோலங்களில் புள்ளி வைத்து போடும் கோலம், ரங்கோலி, சிக்குக்–கலம், உருவ கோலம் இன்னும் பல வகையான கோலங்கள் உள்ளன.

    மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகளும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெறுவது வழக்கம். இன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு சேலம், நாமக்கல் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    சேலத்தில் பக்தர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    திறந்த வெளியில் நடமாடுவதால் காற்றில் உள்ள ஓசோன் உடலில் படிவதால் உடல் ஆரோக்கியம் தரும் என்பதால், அதிகாலையில் எழுந்து வீதிகளில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். பெண்கள் அதிகாலையில் எழுந்து வீதியில் கோலமிட தொடங்கினர். சேலம் டவுன், பட்டைகோவில் பகுதி, அம்மாபேட்டை, கருங்கல்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மார்கழி பஜனை குழுவினர் அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்ப–டுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றதை காண முடிந்தது. மார்கழி மாதம் முடிய பஜனை குழுவினரின் பாடல் பணி தொடரும். மார்கழி பிறப்பையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவில்,

    சேலம் சுகவனேசுவரர் கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்னத்திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலை வேளையிலேயே பக்தர்கள் வழிபாட்டுக்கு சென்றனர். சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் பெண்கள் அதிகாலையில் பாவை நோம்பு கடைபிடித்தனர். அங்கு கோவிலில் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும், பல கோவில்களிலும் விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.

    இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நரசிம்ம மூர்த்தி கோவில், ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநா–ரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    Next Story
    ×