என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை- துரை வைகோ பேட்டி
- ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
- உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.
சென்னை:
ம.தி.மு.க.வுக்குள் நிலவி வரும் உட்கட்சி மோதலால் தொண்டர்கள் ஏமாந்தது போதும். இனி ம.தி.மு.க.வை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது நல்லது என்று அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. வைகோ சொல்லட்டும் நான் பதில் அளிக்கிறேன் என்றார் துரைசாமி.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க. முடிவு செய்தது. அப்போது அதை எதிர்த்தவர் திருப்பூர் துரைசாமி. இப்போது அவரே ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் சொல்கிறார். ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்.
ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே செயல்படும்.
துரைசாமி தொழிற்சங்க நிர்வாகி. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்துகிறார். கட்சியை தனது பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டார்.
கட்சியை தி.மு.க.வுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
2021 சட்டமன்ற தேர்தலில் கட்சி நலன்களுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சி தொண்டர்கள் புகார் கூறினார்கள். ஆனால் வைகோ தான் துரைசாமியின் அனுபவம், வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதுவும் செய்யவில்லை.
இப்போது உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.
இதற்கிடையே அவரது சொந்த ஊரான திருப்பூரிலேயே அவரது கட்சி விரோத செயல்களை கட்சி தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்