தொழிற்சாலைகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்

சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் வழிகாட்டுதலின் பேரிலும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் உடல் நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.என சுகாதார இணை இயக்குநர் அறிவுறுத்தல்
தொழிற்சாலைகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்
Published on

சேலம்:

சேலம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

தமிழக கூடுதல் அரசு செயலர் உத்தரவின்படியும் சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அறி வுறுத்தலின்பேரிலும் சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் வழிகாட்டுதலின் பேரிலும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதன் உடல் நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வருகிற 17-ந்தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் நடத்தி அதன் விபரத்தை தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் வாரியாக நடத்தப்பட்ட விபரத்தை dcifsalem@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் தலைமையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் போதை பொருள் பயன்பாட்டினை தடுக்க ஒவ்வொரு வட்டங்களின் வாரியாக விழிப்புணர்வு பயிற்சிகள் மேற்கொள்ளபட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com