என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் டிரைவர் தற்கொலை
    X

    கோவையில் டிரைவர் தற்கொலை

    • சின்னராஜ் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
    • ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை புளியகுளம் அருகே உள்ள சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 39). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோடு வேனை கடனுக்கு வாங்கி ஓட்டி வந்தார். ஆனால் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சின்னராஜ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×