search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் டிரைவர் தற்கொலை
    X

    கோவையில் டிரைவர் தற்கொலை

    • ஸ்ருதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ரகு வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
    • இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள வி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் ரகு (வயது 39). டிரைவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் மைசூரை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டது. இதனால் ஸ்ருதி தனது கணவரை பிரிந்து மைசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ரகு மைசூருக்கு சென்று தனது மனைவியை அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்ருதி விவாகரத்து கேட்டு தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ரகு கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.

    இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×