search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையில் தென்காசி வடக்கு மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

    தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையில் தென்காசி வடக்கு மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் - ராஜா எம்.எல்.ஏ. பேச்சு

    • சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் மனோ கரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். தொடர்ந்து தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். அதில், வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைக்கும் பணியை துரிதபடுத்த வேண்டும். தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் தி.மு.க.வில் சேர்க்க வேண்டும்.

    ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் நியமிக்க பட வேண்டிய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பட்டியலை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    தற்போது தி.மு.க. தலை வர் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்தியதை போல் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிக்காக முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் தென்காசி வடக்கு மாவட்டத்தில்தான் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தார்கள் என்ற பெருமையை பெற கடுமை யாக உழைக்க வேண்டும். தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் தென்காசி வடக்கு மாவடடம் முதலிடம் பெற வேண்டும். சமூக வலைத்தளங்களை தமிழக அரசின் சாதனைகளை அனைவரும் அறியும் வகை யில் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, பூசைபாண்டியன், கிறிஸ்டோபர், சேர்மத்துரை, வெற்றிவிஜயன், ராமச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், தேவா என்ற தேவதாஸ், வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, சங்கரன்கோவில் மாரிசாமி, பராசக்தி,

    மகேஸ்வரி, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பக விநாயகம், ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபி பாலசுப்பிரமணியன், திருவேங்கடம் மாரிமுத்து, விவேகானந்தன், சுந்தரவடி வேலு, மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், இளைஞரணி சரவணன்,

    பசுபதிபாண்டியன், திலிப் குமார், வீமராஜ், சுற்று சூழல் அணி அழகுதுரை, நகர துணை செயலாளர்கள் கே.எஸ். எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய் குட்டி, கேபிள் கணேசன், வீரா, சிவா, ஜான்சன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×