search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை வரும் அமைச்சர் உதயநிதிக்கு தி.மு.க.வினர் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க வேண்டும்
    X

    கோவை வரும் அமைச்சர் உதயநிதிக்கு தி.மு.க.வினர் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க வேண்டும்

    • அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கோவை வருவது குறித்தும், தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.
    • கோவை மாவட்டத்தில் 10 லட்சம் தி.மு.க உறுப்பினர்கள் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    கோவை,

    கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கோவை வருவது குறித்தும், தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    நாளை இரவு உதயநிதி ஸ்டாலின் கோவை வருகிறார். அப்போது அவருக்கு அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    ஞாயிற்றுக்கிழமை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு பணி, கொடிசியா மைதானம் செல்லும் இடத்தில் அரசின் திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய நிகழ்வுகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    கோவை மாவட்டத்தில் 10 லட்சம் தி.மு.க உறுப்பினர்கள் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி., நாகராஜன் மற்றும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நகர, பகுதி ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×