என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
    X

    நெல்லையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசிய காட்சி. 

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

    • நெல்லை கிழக்கு,மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை சித்தா கல்லூரி எதிரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை, ஆக.20-

    தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவப் பிரிவு ஆகியவை இணைந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை இடங்களில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடை பெற்று வருகிறது.

    நெல்லை

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை சித்தா கல்லூரி எதிரில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலைராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சி பாண்டியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தமயந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ஜான் ரவீந்தர், வில்சன் மணித்துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருள்ராஜ் டார்வின், மாணவரணி அமைப்பாளர் கார்த்திக் குமார், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் கார்த்திக், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பாளை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, வீரபாண்டியன், வக்கீல் அணி செல்வ சூடாமணி, ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி விஜயாபதி ஏ.ஆர். ரஹ்மான், முன்னாள் துணைச் செயலாளர் நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், நித்திய பாலையா, சுந்தர் மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகராஜா மற்றும்

    தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி

    வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மதிய ழகன், ராமஜெயம் தலைமை தாங்கினர். போராட்டத்தை வடக்கு மாவட்ட செயலா ளரும், அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலா ளரும், அமைச்சரு மான அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

    இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பால்துரை, பாலமுருகன்,குமார் பாண்டியன், சுதாகர், ஸ்டாலின், மகேந்திரன் பாரதி, ஜோசப்,அமல்ராஜ், முகமது, ராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார், சீனிவாசன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தர ராஜன், மாநகர இளைஞ ரணி அமைப்பாளர் அருண் குமார், துணை அமைப்பா ளர்கள் சங்கரநாராயணன், செல்வின், ரவி,முகமது, வழக்கறிஞர் டி.டி.சி.ஆர்.பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வக்கீல் செல்வகுமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர்கள் அருண்குமார், சீனிவாசன், உட்பட நூற்றுக் கணக்கான கலந்து கொண்ட னர். இன்று மாலையில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி

    எம்.பி. கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசுகிறார்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீட் தேர்வால் தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து வருவதாகவும், தொடர்ந்து நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வுக்கு ஆதரவாக கவர்னர் ஆர்.என். ரவி பேசி வருவதாக கூறி அதனை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    தென்காசி

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க., தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி புதிய பஸ் நிலை யம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்ட னர். இந்த போராட்டங்களில் தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளை சேர்ந்தவர்கள் மற்றும் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×