search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • தஞ்சையில் மட்டும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு அமைப்பு செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தஞ்சாவூர், அக்.4-

    தஞ்சாவூர் மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களின் அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசிடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீரை பெறமுயற்சி மேற்கொள்ளாத தி.மு.க.அரசை கண்டித்தும், குறுவை சாகுபடியை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்ததை கண்டித்தும், கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்தும், அ.திமு.க. சார்பில் டெல்டா மாவட்டங்களில் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் தஞ்சையில் மட்டும் அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம் 6-ந்தேதிக்கு பதில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தஞ்சை பனகல் கட்டிடம் எதிரே நாளை (வியாழக்கி ழமை) காலை 10 மணிக்கு அமைப்பு செயலா ளர்களும், முன்னாள் அமைச்சர்க ளுமான ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எனவே மாவட்ட, ஒன்றிய, பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய பெருங்குடி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×