search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே  தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் -கனிமொழி எம்.பி. பங்கேற்பு
    X

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய போது எடுத்த படம்.

    ஓட்டப்பிடாரம் அருகே தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் -கனிமொழி எம்.பி. பங்கேற்பு

    • ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் குறுக்குசாலையில் நடந்தது.
    • அ.தி.மு.க. அரசால் எந்த திட்டங்களும்இப்பகுதிக்கு வந்ததில்லை என்று -கனிமொழி எம்.பி. கூறினார்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பதவி ஏற்ற பிறகு இப்பகுதியில் ஆசியாவில் மிகப்பெரிய பர்னிச்சர் பூங்காவும், டைட்டல் பார்க்கும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முந்தைய அ.தி.மு.க. அரசால் எந்த திட்டங்களும்இப்பகுதிக்கு வந்ததில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் காசி விஸ்வநாதன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நவநீதகண்ணன், அன்புராஜன், அவைத் தலைவர் இளையபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×