search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், மாவட்ட அளவிலான கபடி போட்டி
    X

    கபடி போட்டி நடந்தது.

    நாகையில், மாவட்ட அளவிலான கபடி போட்டி

    • போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.
    • தொடாந்து, ஏனங்குடி அணியினர் 3-து பரிசும், கல்லார் அணியினர் 4-வது பரிசும் பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் ஈஷா கிராமோத்சவம் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் நடத்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியில், திருமருகல் ஆலங்குடி, நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பெரியதும்பூர், நாகூர், நாகை வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவை சேர்ந்த 40, அணி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    திருமருகல் மற்றும் ஆலங்குடி வீரர்களுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதைப்போல் நாகை மற்றும் வேதாரண்யம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் நாகை அணியினர் கூடுதல் வெற்றி புள்ளிகள் பெற்று வேதாரண்யம் அணியினரை தோற்கடித்தனர்.

    இதில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் அணியினர், செப்டம்பர் மாதம் திருச்சி மற்றும் கோவையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நம்பியார் நகர் முதல் பரிசு, கீச்சாங்குப்பம் 2-வது பரிசு, ஏனங்குடி 3-து பரிசு, கல்லார் 4-வது பரிசு பெற்றனர்.

    Next Story
    ×