search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
    X

    பள்ளியில் கபடி போட்டி நடந்தது.

    தஞ்சை பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

    • போட்டிகளில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ)பள்ளியில் மாவட்ட அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது.

    போட்டிகளில் தமிழ்நாட்டின் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத்தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமை வகித்தார்.

    ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் . ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    போட்டிகள் 12 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் என 3 நிலைகளில் போட்டி நடைபெற உள்ளது. விளையாட்டுப் போட்டிகளை ரம்யா சத்தியநாதன் கல்விக் குழும தலைவர் சத்தியநாதன் தொடக்கி வைத்தார். போட்டிகள் சி.பி.எஸ்.இ. வாரியத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றது.

    Next Story
    ×