என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவியிடம் தகராறு: கணவன் விஷம் குடித்து தற்கொலை
- சேகர் குடிபோதையில் முந்திரிக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 48) இவர் தன்னுடைய மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு குடிபோதையில் முந்திரிக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார். பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






