search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் இன்னல் குறைப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பேரிடர் இன்னல் குறைப்பு விழிப்புணர்வு பேரணி

    • புயல், வெள்ள பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
    • பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பேரிடர் இன்னல்குறைப்பு விழிப்புணர்வு பேரணி தாசில்தார் மலர்கொடி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது அவர் பேசும்போது,

    எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ள பாதிப்புகளை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அர்ப்பணிப்பு தன்மையுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், அப்போதுதான் பேரிடர் இன்னல்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்றார்.

    நிகழ்ச்சியில் பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம் நடைப்பெற்றது. பேரணி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரைநடைப்பெற்றது.

    பேரணியில் பாலம் தொண்டுநிறுவன செயலாளர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்குமார், நிலைய தீயணைப்பு அலுவலர் காளிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், முரளிதரன், , கிராம நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம், பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள். கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×