என் மலர்tooltip icon

    தர்மபுரி

      ஒகேனக்கல்:

      தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

      இதனால் நேற்று வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் அதிகரித்து வந்தது.

      இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

      மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

      சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

      பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

      இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

      • காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
      • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

      ஒகேனக்கல்:

      காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

      இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

      மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

      சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

      மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

      பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

      காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

      • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
      • மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

      ஒகேனக்கல்:

      காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

      இந்த நிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 6 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

      மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

      சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

      மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

      பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

      காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

      • காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
      • மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

      ஒகேனக்கல்:

      காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இதனால் நேற்று 2500 கனஅடி தண்ணீர் வந்தது.

      இந்த நிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

      இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

      சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

      பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

      காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

      • முன்விரோதத்தில், சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சாதி பெயரை கூறி கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு.
      • 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

      தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது சிறுவனை சாதி பெயரை சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

      தென்கரைக்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம், குறுகிய காலமே வேலை பார்த்துள்ளார்.

      பின்னர், வேலையைவிட்டு நின்ற சிறுவன் தனது மாமாவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் ஆத்திரடைமந்துள்ளார்.

      இதுதொடர்பான முன்விரோதத்தில், சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சாதி பெயரை கூறி கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

      பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக ஏ.பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

      இதையடுத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

      • கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர்.
      • என்னைக்கு கரை வேட்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்

      அரசியலில் முதல்முறையாக பேன்ட் சர்ட் போட்டது நான்தான் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

      தருமபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், "கட்சி வேட்டி ஏன் கட்டவில்லை? என சிலர் கேட்டனர். அரசியலில் முதன் முதலில் பேன்ட் - ஷர்ட் போட்டவன் நான் தான். அதற்கு அப்புறம்தான், அண்ணாமலை அண்ணணா இருக்கட்டும், சீமான் அண்ணணா இருக்கட்டும், முதலமைச்சர் ஸ்டாலின் முதல் விஜய் வரை எல்லாரும் பேன்ட்-ஷர்ட்தான் போடுறாங்க. அதனால, லுக்-அ பார்க்காதீங்க. உள்ளத்தை பாருங்க. என்னைக்கு கரை வேஷ்டி கட்டணும்னு கேப்டன் சொல்வாரு, அன்றைக்கு நான் கட்டுறேன்" என்று தெரிவித்தார். 

      • சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்.
      • கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.

      தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

      கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

      தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

      மேலும் இக்கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

      பொதுக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க. மாநில மாநாடு நடத்துவதற்கான முக்கிய அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். கடலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடத்தப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

      பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

      * தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்டத்திலும் கழகத்திற்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவிற்கும் மற்றும் உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

      * ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிர் இழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளனர். இதை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கின்றது.

      * தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். அவருக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்.

      * வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும், தீங்கும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.

      * மதுபானம் விற்பனையை படிப்படியாக குறைத்தும், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்தும், தமிழகத்தை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

      * கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்.

      * மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

      * தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து உயிர் இழப்புகளும், விபத்துக்களும் நடக்காத வண்ணம் மக்களை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

      மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

      • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
      • நீர்வரத்து காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி செல்கிறது.

      ஒகேனக்கல்:

      கர்நாடகா தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளில் அவ்வப்போது திறந்து விடப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

      இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2500 கன அடியாக குறைந்து உள்ளது.

      இந்த நீர்வரத்து காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி செல்கிறது.

      • தே.மு.தி.க. பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
      • கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

      தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாதம்பட்டி கே.வி.மஹாலில் இன்று தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

      கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

      தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவராக டாக்டர் இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.மோகன்ராஜ், துணை செயலாளர்களாக எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

      மேலும் இக்கூட்டத்தில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

      இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர், தருமபுரி நகர செயலாளர் சுரேஷ், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.கே.கணேசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.கே.குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அவைத் தலைவர்கள், மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட துணை செயலாகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலாளர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

      • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
      • கடந்த இரு தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவே நீடித்து வந்தது.

      ஒகேனக்கல்:

      கர்நாடகா தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளில் இருந்து அவ்வப்போது திறந்து விடப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.

      இந்நிலையில் சில தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வரை அதிகரித்த நிலையில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவே நீடித்து வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

      காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

      • வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
      • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      பாலக்கோடு:

      தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக பாலக் கோடு போலீஸ் டி.எஸ்.பி மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

      இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கொலசனஅள்ளி நெடுஞ்சாலையில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது வெள்ளிசந்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

      அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான 156 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி கொத்தப்பள்ளியை சேர்ந்த சிராஜ் (25) என்பதும், உடன் வந்தவர் கர்நாடகா மாநிலம் சிக்ககொல்லர அட்டி கிராமத்தை சேர்ந்த திலக்குமார் (24) என்பதும் தெரிய வந்தது.

      மேலும் விசாரணையில் 2 பேரும் பெங்களூரில் இருந்து ஈரோட்டிற்க்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

      அதனை தொடர்ந்து குட்காவுடன் ரூ.5 லட்சம் மதிப்பிலான சொகுசு காரையும் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

      • தங்கராஜை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
      • கைதான தங்கராஜ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

      தருமபுரி:

      தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி கிராமத்தில் உள்ளது பெரியாண்டிச்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருட ஒரு திருடன் வந்தான்.

      அப்போது அவன் உண்டியலின் உள்ளே கையை நுழைத்து பணம் எடுக்க முயற்சித்தான். அதில், அவனுடைய கை உண்டியலில் சிக்கி கொண்டது. பின்னர் கையை வெளியே எடுக்க முடியாமல் அவன் விடிய, விடிய கோவில் வளாகத்திலேயே இருந்தான். நேற்று காலை அந்த வழியாக கிராம மக்கள் சென்றனர்.

      அப்போது கோவில் உண்டியலில் திருட முயன்ற திருடனின் கை சிக்கி கொண்டதை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.

      அதில் அவன், சேசம்பட்டி அருகே உள்ள சவுளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது42) எனவும், உண்டியலில் பணத்தை திருட முயற்சித்து கை சிக்கி கொண்டதும் தெரியவந்தது.

      தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உண்டியலை உடைத்து திருடனின் கை எடுத்தனர். இதையடுத்து தங்கராஜை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்த னர்.

      கைதான தங்கராஜ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

      கோவிலில் உண்டியலில் பணத்தை திருட முயன்றபோது கை சிக்கி கொண்டதால் விடிய, விடிய தவித்த திருடன் பரிதாபமாக சிக்கி தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

      ×