search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை வெள்ளியங்கிரி மலையேற குவிந்த பக்தர்கள்
    X

    கோவை வெள்ளியங்கிரி மலையேற குவிந்த பக்தர்கள்

    • பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம்.
    • வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

    வடவள்ளி,

    கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலை யொட்டிய மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க ஆண்டுேதாறும் மார்ச் முதல் மே மாதம் வரை பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

    முதல் நாளான நேற்று 10 ஆயிரம் பக்தர்கள் ஈசனை தரிசிக்க மலை ஏறினர்.இன்று மஹா சிவராத்திரி விழாவையொட்டி பூண்டி வெள்ளியங்கிரி மலையேற ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலையேறினர். ஏழாவது மலைக்கு சென்று சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.மலைக்கு செல்லும் படிக்கட்டுகளின் அடிவாரத்தில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதன்பின்னரே பக்தர்களை மலையேற அனுமதித்து வருகின்றனர்.பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு வனத்துறையினர் 20 ரூபாய் பெற்று கொண்டு ஸ்டிக்கர் ஓட்டி கொடுத்தனர். பக்தர்கள் திரும்ப வரும்போது பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை பெற்று கொள்ளலாம்.

    Next Story
    ×