search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
    X

    சேலத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

    • வேலை தேடியும் சரியான வேலை கிடைக்காத நிலையில் இருந்துள்ளார்.
    • இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த ராமன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் ராமன் (வயது 30). இவர் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் சரியான வேலை கிடைக்காத நிலையில் இருந்துள்ளார். மேலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த ராமன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×