என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கம் நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வணிகவியல் துறை கருத்தரங்கம்

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை சாரபில், 2 நாட்கள் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
    • நெல்லை சாரதா கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை சுஜாதா கலந்துகொண்டு பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை சாரபில், 2 நாட்கள் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.

    தொழில் முனைவோர் எப்படி வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுகிறார்? என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கத்தில் துறை தலைவர் சிரில் அருண் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வேலாயுதம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக குற்றாலம் பராசக்தி கல்லூரி வணிகவியல் பேராசிரியை முருகேஸ்வரி மற்றும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் வணிகவியல் சுயநிதிப்பிரிவு துறை தலைவர் ஜேசுராஜ் கலந்துகொண்டு தொழில் முனைவோராக எவ்வாறு மாற வேண்டும்? என எடுத்துரைத்தனர். இறுதியில் பேராசிரியை கரோலின் கண்மணி ஆனந்தி நன்றி கூறினார்.

    2-வது நாளாக நேற்று சமூக ஊடக சந்தைப்படுத்தலின் சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் துறை தலைவர் திருச்செல்வன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். நெல்லை சாரதா கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை சுஜாதா, சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியை ஷிபா மெர்லின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி மற்றும் இதர கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியை பார்வதிதேவி, டயானா ஸ்வீட்லின், ரூபன் சேசு அடைக்கலம், சுமதி ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியை பாசமலர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் ரமேஷ், சாந்தி, பசுங்கிளி பாண்டியன், சிவக்குமார், அந்தோணி சகாய சித்ரா மற்றும் பேராசிரியர்கள் ராஜ்பினோ, கருப்பசாமி, திலபன், கவிதா, முத்துக்கிருஷ்ணன், சிங்காரவேலு, அந்தோணி பிரைட் ராஜா, பெனட், ராஜபூபதி, சகாய ஜெயசுதா, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×