search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

    • 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

    அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கோதண்டபாணி, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் குருசாமி, சி.ஐ.டி.யூ விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை செயலாளர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

    இதில் சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சாய்சித்ரா, அரசு போக்குவரத்து சிஐடியு சங்க பொருளாளர் ராமசாமி, டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் மதியழகன்,
    டி .ஆர். இ .யூ. சங்க தலைவர் ரஜினி, தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×