search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
    X

     50க்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


    காலி குடங்களுடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

    • விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்குலத் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அந்த பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு வெகு தூரம் சென்று எடுத்துவரும் சூழல் உள்ளது.

    கடலூர்:

    குடிதண்ணீர் மற்றும் சாலை வசதி அமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளித்து ஆர்ப்பாட்டம். விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்குலத் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் அந்த பகுதியில், குடிநீர் வசதிக்காக குடிநீர் குழாய் மற்றும் நீர்த்தேக்க தொட்டி ஆகியவை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு வெகு தூரம் சென்று எடுத்துவரும் சூழல் உள்ளது. இது குறித்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற தலைவரிடத்திலும் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

    இந்நிலையில் தங்கள் பகுதிக்கு புதிய நீர்தேக்க தொட்டி மற்றும் சாலை வசதி அமைத்து தர கோரி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்மாபுரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆ ர்ப்பாட்டத்திற்கு பின் விருத்தாசலம் சார் ஆட்சியர் (பொறுப்பு) லூர்து சாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட சார் ஆட்சியர் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அசோகன், கலைச்செல்வன், நெல்சன், செந்தில், சின்னதம்பி, சத்யா, கவிதா உள்ளிட்ட கம்மாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×