search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதித்தனார் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    ஆதித்தனார் கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், ஏட்டு காளிதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவின் சார்பில், 'சைபர் கிரைம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுதன், ஏட்டு காளிதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மின்னணு தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்து விளக்கி கூறினர்.

    பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். பேராசிரியர்கள் ரமேஷ், கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சிவ இளங்கோ நன்றி கூறினார்.

    Next Story
    ×