என் மலர்
கடலூர்
பண்ருட்டி அருகே காண்டிராக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 39), காண்டிராக்டர். இவர் தனது குடும்பத்தினருடன் பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் பின்பக்க அறையின் கூரையை பிரித்து உள்ளே இறங்கினர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய சிவா வீட்டில் பீரோ திறந்து கிடப்பதை பார்த்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
கொள்ளை குறித்து புதுப்பேட்டை போலீசில் சிவா புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 39), காண்டிராக்டர். இவர் தனது குடும்பத்தினருடன் பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் பின்பக்க அறையின் கூரையை பிரித்து உள்ளே இறங்கினர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய சிவா வீட்டில் பீரோ திறந்து கிடப்பதை பார்த்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
கொள்ளை குறித்து புதுப்பேட்டை போலீசில் சிவா புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே ரோட்டில் சிதறிக்கிடந்தது ரிசர்வ் வங்கி ஏலம் விட்ட பணம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள கோ.குச்சிபாளையம் கிராமத்தில் ரோட்டின் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.
இதில் 1000, 500, 100 என ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ராமநாதன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டனர்.
சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.6 கோடியை மர்மமனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கோ.குச்சிபாளையத்தில் ரோட்டில் கிடந்த பணம் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டனர்.
மேலும் கோ.குச்சிப்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது 3 வீடுகளில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது ரோட்டின் ஓரத்தில் கிடந்த கிழிந்த ரூபாய் நோட்டுகளை தாங்கள் எடுத்து வந்து வீட்டில் வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள மரம்அறுக்கும் தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தனர். அப்போது தொழிற்சாலை நிர்வாகிகள் போலீசாரிடம் கூறியதாவது:-
புதுவையில் மரம் அறுக்கும் தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலை உரிமையாளர் சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏலம் எடுத்து கொண்டு வருவார். அந்த ரூபாய் நோட்டுகளை எங்களுக்கு விற்பார்.
நாங்கள் அவர்களிடமிருந்து 3 லாரிகளில் 10 டன் கிழிந்த நோட்டுகளை வாங்கி வந்தோம். இந்த கிழிந்த நோட்டுகளை துண்டுதுண்டாக வெட்டி எங்களிடம் உள்ள மரத்தூளுடன் கலந்து ஓட்டல் மற்றும் டீக்கடைகளுக்கு விற்பனை செய்வோம்.
மரத்தூளுடன் கிழிந்த ரூபாய் நோட்டுகள் கலந்து இருப்பதால் அவை நன்றாக எரியும். இதனால் எங்களிடம் பலர் மரத்தூள்களை வாங்கிச் செல்வார்கள்.
ஆயுதபூஜையையொட்டி மரம்அறுக்கும் தொழிற்சாலையில் துப்புரவு பணி நடைபெற்றது. அப்போது இங்கு ஒரு மூட்டையில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாயாமானது.
ரோட்டின் ஓரத்தில் அதை யார் வீசிவிட்டு சென்றார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்த மூட்டையை ரோட்டில் வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள கோ.குச்சிபாளையம் கிராமத்தில் ரோட்டின் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.
இதில் 1000, 500, 100 என ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ராமநாதன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டனர்.
சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.6 கோடியை மர்மமனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கோ.குச்சிபாளையத்தில் ரோட்டில் கிடந்த பணம் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டனர்.
மேலும் கோ.குச்சிப்பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது 3 வீடுகளில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது ரோட்டின் ஓரத்தில் கிடந்த கிழிந்த ரூபாய் நோட்டுகளை தாங்கள் எடுத்து வந்து வீட்டில் வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள மரம்அறுக்கும் தொழிற்சாலைக்கு சென்று விசாரித்தனர். அப்போது தொழிற்சாலை நிர்வாகிகள் போலீசாரிடம் கூறியதாவது:-
புதுவையில் மரம் அறுக்கும் தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலை உரிமையாளர் சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை ஏலம் எடுத்து கொண்டு வருவார். அந்த ரூபாய் நோட்டுகளை எங்களுக்கு விற்பார்.
நாங்கள் அவர்களிடமிருந்து 3 லாரிகளில் 10 டன் கிழிந்த நோட்டுகளை வாங்கி வந்தோம். இந்த கிழிந்த நோட்டுகளை துண்டுதுண்டாக வெட்டி எங்களிடம் உள்ள மரத்தூளுடன் கலந்து ஓட்டல் மற்றும் டீக்கடைகளுக்கு விற்பனை செய்வோம்.
மரத்தூளுடன் கிழிந்த ரூபாய் நோட்டுகள் கலந்து இருப்பதால் அவை நன்றாக எரியும். இதனால் எங்களிடம் பலர் மரத்தூள்களை வாங்கிச் செல்வார்கள்.
ஆயுதபூஜையையொட்டி மரம்அறுக்கும் தொழிற்சாலையில் துப்புரவு பணி நடைபெற்றது. அப்போது இங்கு ஒரு மூட்டையில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாயாமானது.
ரோட்டின் ஓரத்தில் அதை யார் வீசிவிட்டு சென்றார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்த மூட்டையை ரோட்டில் வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள் சேலத்தில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோ.குச்சிப்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ரோட்டின் ஓரத்தில் உள்ள ஆலமரத்தின் கீழ் நேற்று இரவு 10 மணியளவில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.
இதைப்பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரூபாய் நோட்டுகளில் 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இருந்தன. அவை துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ராமநாதன், ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தமுடியாத அளவிற்கு துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை யார் வீசிவிட்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையில் துளையிட்டு வங்கி பணம் ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை, சேலம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மாதங்கள் ஆகியும் இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் யார்? என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ. டி ஐ.ஜி.மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்கள் சேலம் விருத்தாசலம் இடையே ரெயிலில் ரூ.6 கோடியை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் யாரும் நடமாடுகிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பண்ருட்டி அருகே ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் பண்ருட்டி விரைந்தனர். துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் சேலம், சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது கள்ள நோட்டா? போலீசாரின் விசாரணைக்கு பயந்து கொள்ளையர்கள் வீசி விட்டு சென்ற பணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ரூபாய் நோட்டுகள் பெங்களூருக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்த இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கிடந்த தடயங்களை சேகரித்தனர்.
ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்த கோ.குச்சிப்பாளையம் கிராமத்தை போலீசார் முற்றுகையிட்டுள்ளனர். வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக யாரும் தங்கியுள்ளார்களா? என்று கேட்டறிந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோ.குச்சிப்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ரோட்டின் ஓரத்தில் உள்ள ஆலமரத்தின் கீழ் நேற்று இரவு 10 மணியளவில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.
இதைப்பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரூபாய் நோட்டுகளில் 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இருந்தன. அவை துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ராமநாதன், ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தமுடியாத அளவிற்கு துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை யார் வீசிவிட்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையில் துளையிட்டு வங்கி பணம் ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை, சேலம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மாதங்கள் ஆகியும் இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் யார்? என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ. டி ஐ.ஜி.மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்கள் சேலம் விருத்தாசலம் இடையே ரெயிலில் ரூ.6 கோடியை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் யாரும் நடமாடுகிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பண்ருட்டி அருகே ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் பண்ருட்டி விரைந்தனர். துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் சேலம், சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது கள்ள நோட்டா? போலீசாரின் விசாரணைக்கு பயந்து கொள்ளையர்கள் வீசி விட்டு சென்ற பணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ரூபாய் நோட்டுகள் பெங்களூருக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்த இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கிடந்த தடயங்களை சேகரித்தனர்.
ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்த கோ.குச்சிப்பாளையம் கிராமத்தை போலீசார் முற்றுகையிட்டுள்ளனர். வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக யாரும் தங்கியுள்ளார்களா? என்று கேட்டறிந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புவனகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை:
புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமல், லாரி டிரைவர். இவரது மனைவி குமாரசெல்வி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கமலுக்கும், குமாரசெல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக குமாரசெல்வி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமாரசெல்வி, சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமாரசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குமாரசெல்வியின் தாய், புவனகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து குமார செல்வி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் குமாரசெல்விக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமல், லாரி டிரைவர். இவரது மனைவி குமாரசெல்வி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கமலுக்கும், குமாரசெல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக குமாரசெல்வி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமாரசெல்வி, சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமாரசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குமாரசெல்வியின் தாய், புவனகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து குமார செல்வி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் குமாரசெல்விக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் ஜெயிலில் கைதிக்கு பிஸ்கட் பாக்கெட்டுக்குள் மறைத்து கொடுத்த கஞ்சாவை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
புதுவை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்க்க புதுவையை சேர்ந்த ராம்குமார், அஜித் ஆகிய 2 பேரும் கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர்.
அவர்கள் விநாயகமூர்த்தியை பார்த்து பேசினார்கள். பின்னர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை விநாயகமூர்த்தியிடம் கொடுத்து விட்டுச்சென்றனர்.
சிறைக்காவலர்கள் சந்தேகம் அடைந்து அந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி சோதனையிட்டபோது அதில் 10 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பிஸ்கட் பாக்கெட்டையும், கஞ்சாவையும் சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சிறை அலுவலர் ஜெயராமன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் ராம்குமார், அஜித், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை பார்க்க புதுவையை சேர்ந்த ராம்குமார், அஜித் ஆகிய 2 பேரும் கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர்.
அவர்கள் விநாயகமூர்த்தியை பார்த்து பேசினார்கள். பின்னர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை விநாயகமூர்த்தியிடம் கொடுத்து விட்டுச்சென்றனர்.
சிறைக்காவலர்கள் சந்தேகம் அடைந்து அந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி சோதனையிட்டபோது அதில் 10 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த பிஸ்கட் பாக்கெட்டையும், கஞ்சாவையும் சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சிறை அலுவலர் ஜெயராமன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் ராம்குமார், அஜித், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உல்லாசத்துக்கு அழைத்ததால் மாமனாரை தீர்த்துக்கட்டிதாக மருமகள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி (வயது 70). இவர் கடந்த 30-ந் தேதி சிதம்பரம்- விருத்தாசலம் சாலையில் உடல் முழுவதும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிதம்பரம்ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.
வாகனம் மோதி இறந்திருக்கலாம் என சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கந்தசாமியின் சாவில் மர்மம் உள்ளது. அவரை யாரோ அடித்துக்கொலை செய்திருக்கிறார்கள் என அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கந்தசாமியின் மருமகள் செந்தமிழ்செல்வி (50)யை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கந்தசாமியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசில் செந்தமிழ் செல்வி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் எனது கணவர், குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வந்தேன். திடீரென எனது கணவர் அன்பழகன் இறந்துவிட்டார். இதையடுத்து நான் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். அன்பழகன் இறந்த சில நாட்கள் ஆனதும் மாமனார் கந்தசாமி, எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். தினமும் இரவு கந்தசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என்னை உல்லாசத்துக்கு அழைப்பார். நான் அவரை திட்டி அனுப்பி விடுவேன். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகமானது.
கடந்த 29-ந் தேதி இரவு மது குடித்துவிட்டு வந்த கந்தசாமி, என்னை ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், அவர் ஆபாசமாக திட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் கந்தசாமியின் தலை மற்றும் உடலில் சரமாரியாக தாக்கினேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
அதன்பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் எனது மாமனாரின் அண்ணன் மகனான வேல்முருகன்(44) எனது வீட்டுக்கு வந்தார். அவரிடம் நான், நடந்ததை கூறினேன். உடனே அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார்.
கந்தசாமியின் உடலை சாலையில் போட்டு விபத்தில் அடிபட்டது போன்று நாடகமாடலாம் என முடிவு செய்தோம். அதன்படி மயங்கி கிடந்த கந்தசாமியை 2 பேரும் தூக்கிச்சென்று, சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் போட்டுவிட்டு எதுவும் தெரியாததுபோல் இருந்தோம்.
கிராம மக்கள் எங்களிடம் கேட்டபோது, விபத்தில் கந்தசாமி அடிபட்டதாக கூறி நாடகமாடினோம். ஆனால் போலீசார் என்னை பிடித்துவிட்டனர். மேற்கண்டவாறு செந்தமிழ்செல்வி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
செந்தமிழ்செல்வி கொடுத்த தகவலின் பேரில் வேல்முருகனையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி (வயது 70). இவர் கடந்த 30-ந் தேதி சிதம்பரம்- விருத்தாசலம் சாலையில் உடல் முழுவதும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிதம்பரம்ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக இறந்தார்.
வாகனம் மோதி இறந்திருக்கலாம் என சேத்தியாதோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் கந்தசாமியின் சாவில் மர்மம் உள்ளது. அவரை யாரோ அடித்துக்கொலை செய்திருக்கிறார்கள் என அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கந்தசாமியின் மருமகள் செந்தமிழ்செல்வி (50)யை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கந்தசாமியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசில் செந்தமிழ் செல்வி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் எனது கணவர், குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வந்தேன். திடீரென எனது கணவர் அன்பழகன் இறந்துவிட்டார். இதையடுத்து நான் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். அன்பழகன் இறந்த சில நாட்கள் ஆனதும் மாமனார் கந்தசாமி, எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். தினமும் இரவு கந்தசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என்னை உல்லாசத்துக்கு அழைப்பார். நான் அவரை திட்டி அனுப்பி விடுவேன். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகமானது.
கடந்த 29-ந் தேதி இரவு மது குடித்துவிட்டு வந்த கந்தசாமி, என்னை ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், அவர் ஆபாசமாக திட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் கந்தசாமியின் தலை மற்றும் உடலில் சரமாரியாக தாக்கினேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
அதன்பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் எனது மாமனாரின் அண்ணன் மகனான வேல்முருகன்(44) எனது வீட்டுக்கு வந்தார். அவரிடம் நான், நடந்ததை கூறினேன். உடனே அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார்.
கந்தசாமியின் உடலை சாலையில் போட்டு விபத்தில் அடிபட்டது போன்று நாடகமாடலாம் என முடிவு செய்தோம். அதன்படி மயங்கி கிடந்த கந்தசாமியை 2 பேரும் தூக்கிச்சென்று, சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் போட்டுவிட்டு எதுவும் தெரியாததுபோல் இருந்தோம்.
கிராம மக்கள் எங்களிடம் கேட்டபோது, விபத்தில் கந்தசாமி அடிபட்டதாக கூறி நாடகமாடினோம். ஆனால் போலீசார் என்னை பிடித்துவிட்டனர். மேற்கண்டவாறு செந்தமிழ்செல்வி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
செந்தமிழ்செல்வி கொடுத்த தகவலின் பேரில் வேல்முருகனையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
நெய்வேலியில் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் கண்களை தானமாக வழங்கப்பட்டது.
நெய்வேலி:
நெய்வேலி அருகேயுள்ள ஏ.குறவன்குப்பம் வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயமணி (வயது 45). இவர் பெரியாகுறிச்சி மெயின் ரோட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
வேலைக்கு சென்ற ஜெயமணி வாகனங்களை தண்ணீரால் சுத்தம் செய்யும் மோட்டார் அறைக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த ஜெயமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெயமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் ஜெயமணியின் கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கத்தினர் ஜெயமணியின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர். ஜெயமணியின் கண்கள் புதுவை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.
நெய்வேலி அருகேயுள்ள ஏ.குறவன்குப்பம் வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயமணி (வயது 45). இவர் பெரியாகுறிச்சி மெயின் ரோட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
வேலைக்கு சென்ற ஜெயமணி வாகனங்களை தண்ணீரால் சுத்தம் செய்யும் மோட்டார் அறைக்கு சென்றபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த ஜெயமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெயமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில் ஜெயமணியின் கண்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கத்தினர் ஜெயமணியின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர். ஜெயமணியின் கண்கள் புதுவை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.
வேப்பூர் அருகே டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 17 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
வேப்பூர்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் 20 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை 3 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் ஆம்னி பஸ்சும், டிராக்டரும் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி ரெயில்வே மேம்பால தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் இடி பாடுகளுக்குள் சிக்கினர். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினர்.
விபத்தில் பண்ருட்டி கண்டரக்கோட்டையை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பழனி, மார்த்தாண்டத்தை சேர்ந்த பஸ் டிரைவர் அமர்நாத், சென்னை போரூரைச் சேர்ந்த லட்சுமி, அசோக்நகரை சேர்ந்த கார்த்திக், நெல்லை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன், பாளையங்கோட்டையை சேர்ந்த ராஜா, மதுரை என்.ஜி.நகரை சேர்ந்த மகாலட்சுமி உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி காயமடைந்த 17 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் டிராக்டர் டிரைவர் பழனியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கி ரெயில்வே மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த ஆம்னி பஸ்சும், டிராக்டரும் கிரேன் மூலம் மீட்கப்பட்டன. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் 20 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் இன்று அதிகாலை 3 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் ஆம்னி பஸ்சும், டிராக்டரும் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி ரெயில்வே மேம்பால தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் இடி பாடுகளுக்குள் சிக்கினர். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அபயக்குரல் எழுப்பினர்.
விபத்தில் பண்ருட்டி கண்டரக்கோட்டையை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பழனி, மார்த்தாண்டத்தை சேர்ந்த பஸ் டிரைவர் அமர்நாத், சென்னை போரூரைச் சேர்ந்த லட்சுமி, அசோக்நகரை சேர்ந்த கார்த்திக், நெல்லை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன், பாளையங்கோட்டையை சேர்ந்த ராஜா, மதுரை என்.ஜி.நகரை சேர்ந்த மகாலட்சுமி உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி காயமடைந்த 17 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் டிராக்டர் டிரைவர் பழனியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கி ரெயில்வே மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த ஆம்னி பஸ்சும், டிராக்டரும் கிரேன் மூலம் மீட்கப்பட்டன. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரத்தில் இன்று காலை டாஸ்மாக் லாரி வீட்டிற்குள் புகுந்த விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது.
சிதம்பரம்:
தஞ்சையை அடுத்த ராஜமன்னார்குடியில் இருந்து கடலூரில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு 1000 அட்டை பெட்டிகள் அடங்கிய மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. லாரியை தஞ்சை மாவட்டம் சீதப்படுகை பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார்.
லாரி சிதம்பரம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியில் கடலூர்- சிதம்பரம் புறவழிச்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின் கம்பத்தில் மோதியது. பின்னர் அருகில் இருந்த ராஜாராம் என்பவர் வீட்டின் சுவரை இடித்து கொண்டு சமையல் அறைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜசேகர் காயம் அடைந்தார். மோதிய வேகத்தில் லாரியில் தீப்பிடித்தது.
இது குறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜாராமின் குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். லாரி வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்து நின்றதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சையை அடுத்த ராஜமன்னார்குடியில் இருந்து கடலூரில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு 1000 அட்டை பெட்டிகள் அடங்கிய மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. லாரியை தஞ்சை மாவட்டம் சீதப்படுகை பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார்.
லாரி சிதம்பரம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியில் கடலூர்- சிதம்பரம் புறவழிச்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின் கம்பத்தில் மோதியது. பின்னர் அருகில் இருந்த ராஜாராம் என்பவர் வீட்டின் சுவரை இடித்து கொண்டு சமையல் அறைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜசேகர் காயம் அடைந்தார். மோதிய வேகத்தில் லாரியில் தீப்பிடித்தது.
இது குறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜாராமின் குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். லாரி வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்து நின்றதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயம் அடைந்தான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 14). அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று அன்பரசன் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டியில் இருந்து அம்மாபேட்டை செல்லும் பஸ்சில் ஏறினான். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணம் செய்தான்.
அம்மாபேட்டை அருகே பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய அன்பரசன் கீழே விழுந்தான். இதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டியை அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 14). அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று அன்பரசன் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டியில் இருந்து அம்மாபேட்டை செல்லும் பஸ்சில் ஏறினான். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணம் செய்தான்.
அம்மாபேட்டை அருகே பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய அன்பரசன் கீழே விழுந்தான். இதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் கணவர் மாயமானது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் வண்ணாரப் பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மெகபூப்உசேன் (வயது 23). வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
சம்பவத்தன்று மெகபூப் உசேன் மீண்டும் வெளிநாடு செல்வது சம்பந்தமாக ஒருவரை பார்த்து விட்டு வருவதாக மனைவி வஹீதாபானுவிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த வஹீதா பானு பல இடங்களில் கணவரை தேடினார். பலன் இல்லை.
கணவர் மாயமானது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் வஹீதாபானு புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மெகபூப் உசேனை தேடி வருகின்றனர்.
கடலூரில் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தீக்குளித்த அ.தி.மு.க. நிர்வாகிக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கூரைப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் அந்த பகுதியின் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாலும், இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாலும் கணேசன் மனமுடைந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்த கணேசன் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அப்போது ஜெயலலிதா விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என்று கோஷமிட்டார்.
வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து விருத்தாசலம் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் ஆஸ்பத்திரியில் கணேசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்த தகவல் அறிந்ததும் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கணேசனை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கூரைப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவர் அந்த பகுதியின் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாலும், இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாலும் கணேசன் மனமுடைந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்த கணேசன் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அப்போது ஜெயலலிதா விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என்று கோஷமிட்டார்.
வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து விருத்தாசலம் அரசு அஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் ஆஸ்பத்திரியில் கணேசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்த தகவல் அறிந்ததும் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கணேசனை சந்தித்து ஆறுதல் கூறினார்.






