search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகங்களில் அலைமோதிய கூட்டம்
    X

    வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகங்களில் அலைமோதிய கூட்டம்

    • தொண்டாமுத்தூரில் 140 டோக்கன்களும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • கூடுதலாக 50 பேருக்கு டோக்கன் வினியோகம்

    வடவள்ளி,

    தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

    இதன்படி ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக 50 முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    அதேபோல சுபமுகூர்த்த நாளான இன்று அதிக அளவில் பத்திரப்பதிவு நடக்கும் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக 50 பேருக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்பட்டது.

    கோவையில் வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் 120 டோக்கன்களும் , தொண்டாமுத்தூரில் 140 டோக்கன்களும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மற்ற சார்பதிவாளர் அலுவ லகங்களிலும் கூடுதலாக 50 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டன.

    இதனால் சுபமுகூர்த்த தினமான இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.

    Next Story
    ×