search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட தொழிலாளி விபத்தில் சிக்கி பலி
    X

    கட்டிட தொழிலாளி விபத்தில் சிக்கி பலி

    • சரவணன் வாரம் ஒருமுறை மனைவியை பார்க்க செல்வது வழக்கம்.
    • ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள காட்டுமடத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற ஜெகதீஸ் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. சரவணன் ஆழியாறு அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

    இவர் வாரம் ஒருமுறை மனைவியை பார்க்க செல்வது வழக்கம். அதன்படி சரவணன் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை பார்ப்பதற்காக புறப்பட்டார்.

    மேட்டார் சைக்கிள் எஸ்.நல்லூர் அருகே சென்ற போது ரோட்டின் நடுவே இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியது. அப்போது நிலைதடுமாறிய சரவணன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சரவணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் சரவணனை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×