என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    நெல்லையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • மத்திய அரசை கண்டித்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    இதில் நஷ்டத்தில் இயங்கிவரும் அதானி குழுத்திற்கு மத்திய அரசின் நிறுவன பங்குகளை விற்கக்கூடாது, அரசு முதலீடுகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், அய்யப்பன், மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், பரணிஇசக்கி, ராஜேஷ்முருகன் உளள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×