என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைக்க சென்ற தகராறில் மோதல்:    கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு
    X

    கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைக்க சென்ற தகராறில் மோதல்: கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு

    • ராஜா, சர்மிளா இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
    • தந்தை சந்திரசேகருக்கும் மருமகன் ராஜா தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ராஜாவின் தாய்க்கும் சர்மிளாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் சர்மிளா கோபித்துக் கொண்டு இந்திலியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வர தன் சொந்தக்காரர்கள் சித்ரா, பிரபு, அலமேலு, தெய்வமணி ஆகியோருடன் ராஜா சென்றனர். இதனால் சர்மிளாவின் தந்தை சந்திரசேகருக்கும் மருமகன் ராஜா தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டது. அப்போது அவர்கள் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக சந்திரசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×