search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
    X

    விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது

    • தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் ஏழை பிள்ளையார் கோவில் அருகில் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாண்டித்துரை (வயது 28) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில 570 மது பாட்டில்கள் மற்றும் 140 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    அதே போல புதிய பஸ் நிலையம் அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவன்காளை என்பவரது மனைவி மகேஷ்வரி (40), விஜயகுமார் என்பவரது மனைவி திவ்யா (40) ஆகிய இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 300 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாகையில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பாக செயல்பட்டு சட்டவிரோதமாக மது விற்பனை ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    Next Story
    ×