search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் அம்பை ஒன்றிய செயலாளர் முருகன், நெல்லை மண்டல செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    வள்ளியூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வள்ளியூர் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சேது ராமலிங்கம் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அம்பை ஒன்றிய செயலாளர் முருகன், நெல்லை மண்டல செயலாளர் கிருஷ்ணன், வங்கி ஊழியர் சங்க தலைவர் ரெங்கன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் உடையப்பன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏஸ்.ஏ.பி.பாலன், ராதாபுரம் வட்டார விவசாயிகள் சங்க செயலாளர் கலைமுருகன், வேம்பு சுப்பையா, சந்தானமுத்து, சாந்தி உள்ளிட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து கோஷ மிட்டனர்.

    Next Story
    ×