search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலி
    X

    கோவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் மோதி படுகாயம்
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

    சூலூர்,

    சூலூர் கண்ணம்பாளையம், ரத்தினத்தான் தோட்டம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சஞ்சீவ் (வயது 19). இவர்

    எல்.அன்.டி புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சஞ்சீவ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சின்னியம்பாளையம் நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக 2 பேர் நடந்து சென்றனர். எனவே அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சஞ்சீவ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த சஞ்சீவ் கீழே விழுந்தார். அப்போது பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நீலாம்பூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல்அறிந்த சூலூர் போலீசார், சஞ்சீவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எல்.என்.டி புறவழிச்சா லையில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் அங்கு பொதுமக்களின் நட மாட்டம் குறையவில்லை.

    விபத்தில் பலியான சஞ்சீவ் தொட்டிபாளையம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது சகோதரியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மாலையில் பணி முடிந்ததும் வீட்டுக்கு மீண்டும் அழைத்து செல்வது வழக்கம்.

    இதற்காக தான் சஞ்சீவ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார். அப்போது அவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான விவரம் தெரியவந்து உள்ளது.

    இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×