search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கல்லூரி பேராசிரியை - 2 கல்லூரி மாணவிகள் மாயம்
    X

    கோவையில் கல்லூரி பேராசிரியை - 2 கல்லூரி மாணவிகள் மாயம்

    • மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    கோவை.

    கோவை சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (49). இவருக்கு 20 வயதில் மகள் உள்ளார்.

    இவர் கோவை பன்னிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் மாணவியின் செல்போனுக்கு போன் செய்தனர். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதனால் அதிர்ச்சியான அவர்கள் மாணவியின் கல்லூரி தோழிகள் விசாரித்ததுடன், அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளை கண்டுபிடித்து தரும்படி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோருடன் கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்தார்.

    பட்டமளிப்பு விழா முடிந்ததும், மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரி அலுவலகத்தில் சென்று, சான்றிதழ் வாங்கி விட்டு வருவதாக கூறி சென்றார். பெற்றோர் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போதும், அது சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    போத்தனூரை சேர்ந்தவர் சிரஞ்சிவி. இவரது மனைவி சுசித்ரா (32). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சுசித்ரா வீட்டிற்கு வரவில்லை. இது தொடர்பாக சிரஞ்சிவி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுசித்ராவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×