என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    291 பேருக்கு ரூ.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் வழங்கினார்
    X

    நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    291 பேருக்கு ரூ.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் வழங்கினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 418 மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
    • முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் முத்து ப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமை யில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.

    இதில் முத்துப்பேட்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 418 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.

    அந்த வகையில் நேற்றுடன் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, வருவாய்துறை சார்பில் 291 பேருக்கு ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 357 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவா ஸ்கான், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன், தாசில்தார் மகேஷ் குமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சந்தான கோபால கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை, துணை தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×