என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோழசிராமணி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
- சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- சோழசிராமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.29 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சிக்கு உட்பட சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து புத்தகங்களை வாசிக்க செய்து கலெக்டர் பார்வை யிட்டார். அதனை தொடர்ந்து சோழசிராமணி ஊராட்சி அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகளின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை, குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்ட றிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் சோழசிராமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.29 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணி யினை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அலுவ லர்களுக்கு அறிவுறுத்தி னார். இந்த ஆய்வின் போது, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் துரைசாமி, பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.