search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வேளாண் பல்கலை பேராசிரியரை அடைத்து வைத்து மிரட்டல்
    X

    கோவையில் வேளாண் பல்கலை பேராசிரியரை அடைத்து வைத்து மிரட்டல்

    • சுகாதாரமான நீரை வினியோகம் செய்யவில்லை.
    • நான் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தேன்.

    பீளமேடு,

    கோவை ஆவா ரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சங்கர். இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் வேளாண் பல்கலையில் பேராசிரி யராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் சண்முகம், அஸ்வின், பிராங்கிளின் என்பவர்களுடன் சேர்ந்து குடிநீர் விற்பனை நிறு வனத்தை நடத்தி வந்தேன்.

    ஆனால் அவர்கள் சுகாதாரமான நீரை வினியோகம் செய்யவில்லை. அதனை ஆய்வு செய்ய நான் கம்பெனிக்கு சென்றேன். ஆனால் சண்முகம் என்னை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் நான் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தேன்.

    இதனை தெரிந்து கொண்ட அவர்கள் என்னை கம்பெனிக்குள் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன நான் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தேன்.

    என்னை அடைத்து வைத்து மிரட்டிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து போலீசார் சண்முகம், அஸ்வின், பிராங்கிளின் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×