என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை - கலெக்டர் தொடங்கி வைத்தார்
- தீபாவளி பண்டிகையின்போது சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது.
- கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து வருகிறது.
மேலும் தனது வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது
இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடி வமைப்புடன் கூடிய கோவை மென் பட்டு புடவைகள், காஞ்சிபுரம்,ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள்,பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக வந்துள்ளன.
தென்காசி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த தீபாவளி 2021-ம் ஆண்டு பண்டிகை காலத்தில் தென்காசி விற்பனை நிலையத்தில் ரூ. 40.65 லட்சம் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு 11-வது மற்றும் 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவிகித அரசு தள்ளுபடி யுடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நெல்லை மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் ரகம் மற்றும் பகிர்மானம் பொறுப்பு அன்பரசு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பூமா, தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, அரசு அலுவலர்கள் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்