என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மாவட்ட தலைவர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் நெல்லை மாவட்ட கிளை சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் நிர்வாகிகள் நடராஜ கண்ணன், முருகேசன், மாரியப்பன், பரமசிவன், சந்திரலால் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பயிர்கடன், நகைக்கடன், மகளிர்குழு கடன்களை உரிய தொகை வட்டியுடன் முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story






