search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் - பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
    X

    முதல்வர் ஸ்டாலின்

    நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் - பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    • கடந்த மாதம் நடந்த மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட ஜாம்பவான்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா 2ம் இடம் பிடித்தார்.
    • நார்வே செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    சென்னை:

    நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 9 சுற்றுக்கள் நடந்த இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும், புகழ் மாலைகளும் மென்மேலும் குவியட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×