search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசியல் ரீதியாக காவல் துறையில் யாரையும் இடமாற்றம் செய்யமாட்டோம்- மு.க.ஸ்டாலின் உறுதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரசியல் ரீதியாக காவல் துறையில் யாரையும் இடமாற்றம் செய்யமாட்டோம்- மு.க.ஸ்டாலின் உறுதி

    • யார் அப்படி தூக்கி அடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
    • குறைகளை சொன்னால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றுதான் மக்கள் தங்களை இங்கு உட்கார வைத்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் இன்று காவல் துறை சம்பந்தமாக விவாதம் நடைபெற்றது. அப்போது மானிய கோரிக்கை மீது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல் துறையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாக குறிப்பிட்டார்.

    இதற்கு குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வைத்துள்ளார் என்றும், யார் அப்படி தூக்கி அடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    மேலும், ஆதாரத்தோடு சொல்லுங்கள் அதை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. குறைகளை சொன்னால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றுதான் மக்கள் தங்களை இங்கு உட்கார வைத்து இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாராளமாக குறை சொல்லுங்கள் ஆனால் ஆதாரத்துடன் சொல்லுங்கள் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, உறுப்பினர் கேள்வி எழுப்பி இருக்கிறார். முதலமைச்சர் அதற்கு பதில் தெரிவித்து உள்ளார் அத்துடன் முடிந்துவிட்டது என கூறினார்.

    தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிந்து விட்டது என அ.தி.மு.க. கொறடா கூறுகிறார். ஆனால் மீண்டும் அதே கேள்வியை தான் உறுப்பினர் எழுப்புகிறார், எதை கூறுவதாக இருந்தாலும் எதிர்கட்சியினர் ஆதாரத்துடன் கூறட்டும் என தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு காவல் துறை குடும்பத்தினரிடம் இருந்து மூன்று முறை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. அவர்களின் குடும்ப சுற்றுச்சூழல் காரணமாக அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையே அ.தி.மு.க. உறுப்பினர் குறிப்பிட்டு பேசினார் என்றும் விளக்கினார்.

    தொடர்ந்து பேசிய முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவரும் முதலமைச்சராக இருந்தவர்தான்.

    காவல் துறையை கையில் வைத்துக்கொண்டிருந்தவர் தான், அவருக்கு தெரியாதது எதுவும் இருக்காது. ஏதேனும் தவறுகள் நடைபெற்று இருந்தால் மாற்றப்படுவார்கள்.

    ஆனால் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுவது போல் தூக்கி அடிப்பது அரசியல் ரீதியாக செய்வது என்பதை இந்த அரசு செய்யாது என்றும் திட்டவட்டமாக கூறியதால் விவாதம் முடிவிற்கு வந்தது.

    Next Story
    ×