என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சோழவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர்.
- பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளிமில் 1998-2000 ல் பயின்ற பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர். பின்னர் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பள்ளி காலங்களில் நடந்த சுவாரசியங்களை பேசி சிரித்து மகிழ்ந்தனர்.
பின்னர் ஆண்டுதோறும் சந்திப்பு நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்வதாகவும் மாணவர்கள் தனது நண்பர்களை 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.
இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் இலட்சுமணபெருமாள், மோகனசுந்தரம், இளவரசன், தேவகி, தமிழரசி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மாணவர்கள் முன்னதாக தாங்கள் பயின்ற பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்