search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
    X

    ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

    • வருகிற மே மாதம் 1-ம் தேதி திருக்கல்யாணமும், 3-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை யொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம், தனபூஜை நடைபெற்றது.

    மாலையில் வாஸ்து சாந்தி, அங்கரார்ப்பணம், ரிஷபந்த னம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும் அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், கோவில் செயல் அலுவலர் முருகன்,தக்கார் தனலெட்சுமி ஆலய திருப்பணி குழுவினர், திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே மாதம் 1-ம் தேதி திருக்கல்யாணமும், 3 -ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    Next Story
    ×