search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8-ந் தேதி முதல்-அமைச்சர் தென்காசி வருகை- அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை
    X

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தபோது எடுத்த படம். அருகில் கலெக்டர் ஆகாஷ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., மற்றும் பலர் உள்ளனர்.


    8-ந் தேதி முதல்-அமைச்சர் தென்காசி வருகை- அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

    • முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8-ந் தேதி தென்காசி வருகை தர உள்ளார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

    தென்காசி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார்.

    ஆய்வு கூட்டம்

    இதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு 8-ந் தேதி வருகை தர உள்ளார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி இம்மாவட்டத்தில் நடை பெறும் அனைத்து நிகழ்வு களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இவ் விழா சிறப்பாக நடைபெறும் வகையில், அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளில் தனிக்கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயனுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்) மைக்கேல் ஆண்டனி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×