search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின்கட்டணம் பாக்கி?
    X

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின்கட்டணம் பாக்கி?

    • மாதம் ஐந்து கோடி ரூபாய் வீதம் செலுத்த அறிவுறுத்தல்
    • உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வலியுறுத்தல்

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும, மாதம் ரூ.5 கோடி வீதம் 20 மாதங்கள் வரை கட்டண நிலுவைத் தொகையை செலுத்த மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் பாக்கி வைத்திருக்கும் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்கவும் முடிவு செய்துள்ளது.

    நீண்ட நாட்களாக பயனற்ற மின் இணைப்புகள், தேவையற்ற மின் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும் முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×