என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
செல்லப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- வேத மந்திரம் முழங்க சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
- 91 வகையான புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவலஞ்சுழி அடுத்த தகரவெளியில் உள்ள முஸ்தகலா செல்லப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, விழாவை முன்னிட்டு நடந்த மூன்று கால யாகசாலை பூஜையில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
பின்னர், 91 வகையான புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் கோவில் நிர்வாகிகள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.






