என் மலர்
உள்ளூர் செய்திகள்

திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.
நாகை நவநீதகிருஷ்ணர் கோவிலில் தேரோட்டம்
- கிருஷ்ணா, கோவிந்தா என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேர் வடம் பிடிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாகப்பட்டினம் நவநீத கிருஷ்ணர் கோவிலில் தேர்ரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரினில் அலங்கரித்து வைக்கப்பட்ட ருக்மணி சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது மேள மேளம் முழங்க பக்தர்கள் கிருஷ்ணா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்துவர, தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலை சென்றடைந்தது.
நவநீதகிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற திருத்தேர்ரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






