search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மினிலாரி மோதி மத்திய அரசு ஊழியர் பலி
    X

    மினிலாரி மோதி மத்திய அரசு ஊழியர் பலி

    • மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
    • மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    தஞ்சாவூர்:

    திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் துரைராஜன் (வயது 39). இவர் ஊட்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறை க்காக துரைரா ஜன் திருச்சிக்கு வந்தார். பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாவட்டம் மெலட்டூருக்கு சென்றார். இதையடுத்து அங்கிருந்து திருச்சிக்கு அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    தஞ்சை அருகே அருள்மொழிபேட்டை - மாரியம்மன் கோவில் புறவழி சாலையில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருக்கிறது. அப்போது எதிரே தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி சங்கீதா பலத்த காயமடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரைராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி கண்முன்னே கணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×